சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இடம்பெற முடியாதது ஏன் தெரியுமா..? காரணத்தை வெளியிட்ட எம்.எஸ்.கே பிரசாத் !!

சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இடம்பெற முடியாதது ஏன் தெரியுமா..? காரணத்தை வெளியிட்ட எம்.எஸ்.கே பிரசாத்

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. இவர் இந்திய அணிக்காக 226 ஒருநாள், 78 டி-20, 18 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்திய அணிக்காக ஜூலை 2018 இல் இங்கிலாந்துக்கு எதிராக ரெய்னா விளையாடினார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டில் ரெய்னா மூட்டுப்பகுதியில் ஏற்பாட்ட காயத்துக்காக நெதர்லாந்தில் ஆப்ரேஷன் செய்து கொண்டார். இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது விருப்பமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க ரெய்னா ரெடியாக இருந்தார். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் ரெய்னா புறக்கணிக்கப்பட்டது குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில், “கடந்த 1999 இல் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விவிஎஸ் லட்சுமண் தனது இடத்தை பறிகொடுத்தார். ஆனால் அதன் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் 1400 ரன்கள் அடித்து மீண்டும் தன்னை நிரூபித்தார். இதைத் தான் சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்படும் போது அவர்களிடம் எதிர்பார்ப்பது” என்றார்.

ரெய்னா கடந்த 2018-19 ரஞ்சிக்கோப்பை தொடரில் இரண்டு அரைசதம் உட்பட 243 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல 2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக 383 ரன்கள் அடித்தார். இதுகுறித்து பிரசாத் கூறுகையில், “ஆனால் எதிர்பாராத விதமாக ரெய்னா விஷயத்தில் இது போல நடக்கவில்லை. அதே நேரத்தில் மற்ற வீரர்கள் உள்ளூர் மற்றும் இந்தியா ஏ போட்டிகளில் அசத்தி பெரிய வீரர்களாக உருவெடுத்துவிட்டனர்” என்றார்.

Mohamed:

This website uses cookies.