நீங்க தான் அடுத்த டிவில்லியர்ஸா..? முக்கியமான போட்டியில் மீண்டும் சொதப்பிய சூர்யகுமார் யாதவ்; பொறுமை இழந்த இந்திய ரசிகர்கள் !!

நீங்க தான் அடுத்த டிவில்லியர்ஸா..? முக்கியமான போட்டியில் மீண்டும் சொதப்பிய சூர்யகுமார் யாதவ்; பொறுமை இழந்த இந்திய ரசிகர்கள்

முக்கியமான போட்டியில் மீண்டும் ஒரு முறை சூர்யகுமார் யாதவ் சொதப்பியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி நியூயார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடரின் 19வது போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (13) மற்றும் விராட் கோலி (4) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் சற்று பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், அடுத்ததாக களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடாமால், முக்கியமான கடந்த போட்டிகளில் சொதப்பியதை போலவே இந்த போட்டியிலும் 8 பந்துகளில் 7 ரன்கள் குவித்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.

ரிஷப் பண்ட் (42), அக்‌ஷர் பட்டேல் (20) ஆகிய இருவரை தவிர அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 19 ஓவர் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தநிலையில், முக்கியமான போட்டிகளில் சொதப்புவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கும் சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியிலும் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் சூர்யகுமார் யாதவை சமூக வலைதளங்களில் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதில் சில;

Mohamed:

This website uses cookies.