சமாளிக்கவே முடியல… இப்போதைக்கு இந்த இந்திய வீரர் தான் உலகின் நம்பர் 1 வீரர்; மனதார பாராட்டிய தென் ஆப்ரிக்கா வீரர் !!

சமகால கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வரும் சூர்யகுமார் யாதவை, தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரரான பர்னல் மனதார பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான தென் ஆப்ரிக்கா அணி, இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் மிக மோசமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அர்ஸ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி தென் ஆப்ரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததே தென் ஆப்ரிக்கா அணியின் தோல்விக்கான காரணமாக அமைந்தது.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை (2-10-22) நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இரண்டாவது குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரரான பர்னல், இந்திய அணியின் சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் குறித்து பர்னல் பேசுகையில், “கடந்த சில மாதங்களாக சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை வைத்து பார்க்கும் பொழுது, சூர்யகுமார் யாதவ் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த டி.20 பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பது எனது கருத்து. சூர்யகுமார் யாதவ் அனைத்து திசைகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பதால் அவரை கட்டுப்படுத்துவது கடினமானது. அவர் அடிக்கும் சில ஷாட்கள் தனித்துவமிக்கது. எங்களுடனான முதல் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் மிக சிறப்பாக விளையாடினார்” என்று தெரிவித்தார்.

இரண்டாவது டி.20 போட்டி குறித்து பர்னல் பேசுகையில், “முதல் போட்டியில் எங்களது திட்டங்களை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. ஆனால் சில சமயங்களில் இது போன்று நடப்பது இயல்பு தான். சில ஆடுகளங்களை உடனடியாக புரிந்து கொள்ள முடியாது, அதே போன்று புதிய இடத்தில் முதல் போட்டியிலேயே வெற்றி பெறுவதும் சாதரண விசயம் கிடையாது. எங்களது பேட்ஸ்மேன்கள் தலைசிறந்த வீரர்கள், எனவே கடந்த போட்டியில் சொதப்பிவிட்டதை மட்டும் காரணமாக வைத்து பயம் கொள்ள தேவை இல்லை” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.