டி.20 உலகக்கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும்; ஜாஸ் ஹசில்வுட் சொல்கிறார் !!

ஆஸ்திரேலியா மைதானத்தில் யாரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்.

2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட இருக்கிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் பங்கேற்பதற்கு கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தயாராகிவிட்டன. அதற்கு முன்னதாக ஒரு சில தொடர்களில் விளையாடிவிட்டு நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு பறக்க உள்ளனர். இந்திய அணி அக்டோபர் நான்காம் தேதி தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டி முடித்த பிறகு அக்டோபர் 5ஆம் தேதி மாலை மும்பையில் இருந்து மெல்போன் நகருக்கு செல்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பொதுவாக ஆஸ்திரேலியா மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஒருசில மைதானங்கள் மட்டுமே சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியில் வேகப்பந்துவீச்சாளர்களை போதிய அளவில் எடுத்துச் செல்கின்றனர். இந்திய அணியிலும் 15 பேர் பட்டியலில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். மேலும் ரிசர்வ் வரிசையில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். தற்போது கூடுதலாக இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களையும் இந்திய அணியில் இணைத்து அழைத்துச் செல்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய மைதானம் எப்பேர்பட்டது? யாரால் இந்த டி20 உலக கோப்பையில் நன்றாக செயல்பட முடியும்? என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட். அவர் கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த டி20 உலக கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர்களால் நன்றாக செயல்பட முடியும். மைதானம் மிகப்பெரியது ஆகையால் இதனை பயன்படுத்திக் கொண்டு பேட்ஸ்மேன்களை அடிக்கவைத்து விக்கெட் எடுக்க முயற்சிக்க வேண்டும். அதே நேரம் மைதானம் பெரியது என்பதால் அதற்கு ஏற்றால் போல பில்டிங் அமைத்து, சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிக அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். ஆகையால் என்னை பொறுத்தவரை, இந்த வருடம் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுவார்கள் என கருதுகிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.