ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்கான போட்டி துபாய் அமீரகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இந்த போட்டியில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர், மேலும் இந்திய அணி செய்த தவறு குறித்தும் இந்திய அணியின் தேர்வு குறித்தும் பல்வேறு வகையான கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.


மேலும் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று சொல்லிவந்த பெரும்பாலானோருக்கு இந்திய அணியின் தோல்வி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது இதனால் இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து ஆகிய அணிகளில் இருந்து எந்த அணி இறுதி போட்டியில் வெற்றி பெறும் என்று தனது கருத்தைத் ஒவ்வொருவரும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
2021 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மிகச் சிறந்த முறையில் விளையாடி முன்னிலையில் உள்ளது, ஆனால் ஆஸ்திரேலிய அணி உலகின் தலை சிறந்த அணியாக இன்றும் திகழ்ந்து வருகிறது, நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து சிறந்த பாடங்களை ஆஸ்திரேலிய அணி கற்றுக் கொண்டுள்ளது,மேலும் இதனை வைத்து எதிர்வரும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்றும் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருந்தார்.
மேலும் பாகிஸ்தான் அணி குறித்து பேசிய அவர் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலம் பொருந்திய அணியாக உள்ளது, மேலும் இந்த உலக கோப்பை தொடரின் சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தான் என்றும் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.