தினேஷ் கார்த்திக்குடன் போட்டியா..? உண்மையை வெளிப்படையாக பேசிய இளம் வீரர் ரிஷப் பண்ட் !!

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கு இடம் கிடைக்குமா.. கிடைக்காதா… என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பல போட்டிகளில் ஒற்றையாளராக அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த 37 வயதாகும் தினேஷ் கார்த்திக், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக மீண்டும் இந்திய வானில் இடம் பிடித்தார்.

அது மட்டும் இல்லாமல் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் சிறந்த முறையில் பயன்படுத்தி அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்து வரும் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருந்தாலும் தினேஷ் கார்த்திக் போன்று இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மற்றொரு வீரரான ரிஷப் பண்டும் நல்ல பார்மில் இருப்பதால் இருவரில் யாரை அணியில் இணைக்க வேண்டும் என்ற குழப்பம் இந்திய அணியில் நிலவுகிறது. பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தினேஷ் கார்த்திக் பதில் ரிஷப் பண்ட்டை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர் .

 

இந்த நிலையில் இந்தக் கேள்வியை இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டிடமே கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட்,“இதைப் பற்றி நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை, நாங்கள் இருவருமே அணிக்காக 100 சதவீதம் உண்மையாக செயல்படுகிறோம். மற்றதெல்லாம் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கையில் தான் உள்ளது,அவர்களுக்கு யார் தேவைப்படுவார்களோ அதனடிப்படையில் அணி தேர்வு நடைபெறும் ”என்று ரிஷப் பண்ட் பக்குவமாக பதில் அளித்துள்ளார்.

இந்த இருவருமே ஆசியக் கோப்பை காண இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர், இவர்களில் யார் சிறப்பாக செயல்படுகிறாரோ அவர்களுக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.