பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் இதற்கு முன்பு நடைபெற்றுள்ள கடைசி நான்கு போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது, இருந்த போதிலும் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த போட்டிகளில் இரு அணிகளுமே வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டிக்கான இரு அணியுமே எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணி;
ஹசரத்துலாஹ் ஜாஜை, முகமது ஷஜாத், ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ், நஜிபுல்லாஹ் ஜர்டன், முகமது நபி, அஸ்கர் அஃப்கான், குல்பதின் நைப், ரசீத் கான், கரிம் ஜனத், நவீன் உல் ஹக், முஜிபுர் ரஹ்மான்.
இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணி;
முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஃப்கர் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வசீம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹரிஸ் ரவூஃப், ஷாகின் அப்ரிடி.