இந்திய அணி வீரர்கள் அனைவர்க்கும் கிரிக்கெட் போட்டியின் தொடர்பு உள்ள அனைத்து விளையாட்டு பொருட்களுக்கும் நைக் தான் ஸ்பான்சர் ஆனால் தற்போது நைக் நிறுவனத்தால் மீது இந்திய அணி மிகவும் வருத்தத்துடன் உள்ளது.
தற்போது இந்திய அணி நைக் நிறுவனம் அளிக்கும் ஆடைகள் மீது புகார் அளித்து உள்ளார்கள், இந்திய கிரிக்கெட் அணி தலைமையில் ராகுல் ஜோஹ்ரி மற்றும் இந்திய கிரிக்கெட் தலைவரான ரத்னகர் ஷெட்டி இந்த புகாரை உச்சநீதி மன்றத்துக்கு எடுத்து சென்று உள்ளார்கள்.
விரைவில் இந்த விவாதத்தை உச்சநீதி மன்றம் விசாரிக்க உள்ளது, இந்த விவகாரம் தொடர்பாக வி.கே. வினோத் ராய் தனது கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், நைக் இந்தியா தகவல் தொடர்புத் தலைவரான கீர்த்தனா ராமகிருஷ்ணன் இந்த விஷயத்தில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று குறிக்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிறுவனம் ஆன நைக் இந்திய அணிக்கு 2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியுடன் இணைந்துள்ளது,கடந்த ஆண்டு, நைக் கிட்டத்தட்ட 370 கோடி ரூபாய் செலுத்தியது, இது இந்தியாவின் ஸ்பான்சர்ஷிப்பை புதுப்பிக்க 2020 வரை நடக்கும்.
அவர்களது ஒப்பந்தம் 2016 ஜனவரி 1 முதல் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரை தொடங்கி, ஒரு போட்டியில் ரூ. 87,34,000 செலுத்த வேண்டும்