‘நாங்க செம்ம கோவத்துல இருக்கோம்’ கடுப்பில் பேசும் கிரிஸ் மோரிஸ்

தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சஹல், ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செளதாம்ப்டன் ரோஸ் பெளலில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 227/9 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 230/4 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 2 சிக்ஸர், 13 பவுண்டரியுடன் 144 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதையும் அள்ளினார். இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா பெறும் 3-ஆவது தொடர் தோல்வி இதுவாகும்.

தோல்விக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அணி வீரர்கள் வருத்தமாகவும் சிறிது கோபமாகவும் உள்ளார்கள். இந்த நிலையை இன்றிரவு சரிசெய்து, நாளை முதல் பயிற்சிக்குத் திரும்புவோம். அடுத்த ஆட்டத்தில் எதிரணியை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம். இப்போது நிலவரம் தெளிவாக உள்ளது. அடுத்த ஆறு ஆட்டங்களையும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெறவேண்டும். இது நடக்க, எங்களுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படும்.

ஒரு வாரத்தில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ளோம். எங்களுக்கு வழங்கப்பட்ட ஆட்ட அட்டவணை கொஞ்சம் கடினமாகவே உள்ளது. மூன்று ஆட்டங்களில் தோற்றிருப்பது உற்சாகத்தைக் குறைக்கிறது. எனினும் வலுவான மனநிலை கொண்ட வீரர்கள் அணியில் உள்ளார்கள்.

நாங்கள் இன்று இரவு என்ன பிரச்சினை என்பதை கண்டுபிடித்து தீர்வு காண்போம், காலையில் அடுத்த எதிரணிக்குரிய உத்திகளை வகுப்போம்.

நான் டுபிளெசிஸ் முதலில் பேட் செய்த முடிவை பற்றி கருத்து கூற விரும்பவில்லை, ஏனெனில் நான் பிட்ச் எப்படி என்று பார்க்கவில்லை. ஆகவே அது பிரச்சினையல்ல.

SOUTHAMPTON, ENGLAND – JUNE 05: Yuzvendra Chahal of India(R) celebrates after taking the wicket of David Miller of South Africa during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between South Africa and India at The Ageas Bowl on June 05, 2019 in Southampton, England. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)

பிட்ச் 100 ஒவர்களுக்கும் நன்றாகத்தான் இருந்தது. கடினமாக இருந்தது.  நிச்சயம் இது நல்ல கிரிக்கெட் பிட்ச்தான் அதில் சந்தேகமில்லை. ஆகவே முதலில் பேட் செய்தோமா அல்லது 2வது பேட் செய்கிறோமா என்பது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதிலை

என்னைப் பொறுத்தவரை ரன்கள் எடுத்தேன், நன்றாக வீசினேன் ஆனால் பயனில்லை, அதுதான் ஏமாற்றம்” என்றார் கிறிஸ் மோரிஸ்

எங்கள் நாட்டில் உள்ள ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான் – எங்களுடன் இருங்கள், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். உங்களுக்காக நாங்கள் இன்னும் கூடுதலாக எங்களுடைய முயற்சியை வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.