தோனியை போல் ஒரு வீரர் அணியில் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம் தான்

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் பேட் செய்த இந்திய அணி, 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வென்றது.


முன்னதாக, டாஸ் வென்ற இந்தியா பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இலங்கையில் தொடக்க வீரர் குணதிலகா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உடன் வந்த உபுல் தரங்கா அதிகபட்சமாக 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் எடுத்தார். அவரும், சமரவிக்ரமாவும் இணைந்து 2-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். இதில் சமரவிக்ரமா 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. மேத்யூஸ் 17, குணரத்னே 17 ரன்களில் பெவிலியன் திரும்ப, கேப்டன் பெரேரா, டிக்வெல்லா, பதிரானா, தனஞ்ஜெயா, லக்மல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இந்திய தரப்பில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.


தவன் அசத்தல்: இதையடுத்து 216 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் 7 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த தவன்-ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி அபாரமாக ஆடி 2-ஆவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.


ஷ்ரேயஸ் 44 பந்துகளிலும், தவன் 46 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். இந்நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Yuzvendra Chahal and Kuldeep Yadav of India celebrates wicket of Niroshan Dickwella of Sri Lanka during the 3rd One Day International between India and Sri Lanka held at the The ACA-VDCA Stadium, Visakhapatnam on the 17 December 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் துணையுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தினார் தவன். அவர் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரிகள் உள்பட 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாகவும், ஷிகர் தவன் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

போட்டிக்கு பிறகு குல்தீப் யாதவ் கூறியது :

அந்த நேரத்தில் தரங்காவை விக்கெட் எடுத்தது எங்களுக்கு சாதகம் தான். தோனிதான் எங்கு பந்து வீச வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். புல்லர் லெந்த்தில் வீசி அவரை எடுத்துவிட்டோம். தோனி போன்ற ஒரு வீரருடன் அணியில் இருப்பது எங்களை போன்ற இளைஞர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் தான்.

எனக் கூறினார் குல்தீப் யாதவ்.

Editor:

This website uses cookies.