இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அடிலெய்ட் டெஸ்ட் குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
இந்திய அணிக்காக மூன்று விதமான தொடர்களில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தனது கருத்தை பேசி வருவார்.
இந்நிலையில் 2021 ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் தொடரில் நடைபெற்ற சம்பவம் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட ரவி அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இரு வீரர்களும் தனது அபாரமான பேட்டிங் திறமை மூலம் இந்திய அணி அந்த போட்டியில் தோல்வி அடையாமல் இருப்பதற்கு மிக சிறந்த முறையில் தங்களது பங்களிப்பை கொடுத்தனர். காயத்தில் இருந்து கொண்டும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்ட அஸ்வினுக்கு அப்பொழுது வெகுவான பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி குறித்து அஸ்வின் பேசுகையில், அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது எனக்கு மிகுந்த காயம் ஏற்பட்டது, போட்டிக்கு முன் நான் பந்துவீசி பார்த்தேன் அப்பொழுது என்னால் 100 ஓவர்கள் என்னால் வீச முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது, அனைவரும் என்னிடம் வந்து முதல் இன்னிங்சில் 50 வரும் 2-வது இன்னிங்சில் 50 முன்னாள் விட முடியுமா என்று கேட்டனர், அப்பொழுது நான் வலி எனக்கு பெரிது கிடையாது, போட்டி தான் எனக்கு முக்கியம்.என் மீது நான் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன்,மைதானத்தில் இறந்து போனாலும் போவேனே தவிர போட்டியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று ரவி அஸ்வின் தெரிவித்திருந்தார்.
மேலும் அஸ்வின் தெரிவித்ததாவது, 2018-2019 நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படாததன் காரணமாக எனக்கு முழுமையான திருப்தி இல்லை, இதனால் மிகுந்த பாடுபட்டு கடுமையாக பயிற்சி மேற்கொண்டு மீண்டும் அந்த வெற்றியை பெற்றுக் கொண்டேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.