வீரர்களின் தேர்வு தள்ளி வைப்பு: உண்மையான காரணம் என்ன தெரியுமா?

(Photo source: Getty Images)

மேற்கு இந்திய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வை பிசிசிஐ திடிரென ஒத்திவைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் இந்திய-மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன.

ஒருநாள் தொடர் ஆக. 3-இல் தொடங்குகிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆக. 22-இல் தொடங்குகிறது.

முதலில் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் கௌன்டி மைதானத்தில் ஆகஸ்டு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு போட்டிகளும், கயானாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி 3-ஆவது போட்டியும் நடைபெறவுள்ளது.

பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆகஸ்டு 8-ல் கயானாவிலும், 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ட்ரினிடட்டிலும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஜமைக்காவின் சபைனா பார்க்கில் ஆகஸ்டு 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.

இதற்கான அணியை தேர்வு செய்ய மத்திய தேர்வாளர் குழு ஜூலை 19-ஆம் தேதி மும்பையில் கூட உள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு திட்டமிட்டபடி நடைபெறாது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோற்றது. இதனால் அரையிறுதியோடு இந்த அணி உலகக்கோப்பை போட்டிடில் இருந்து வெளியேறியது.

இந்த தோல்வியின் மூலம் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதோடு அவர் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளார் என பல செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், தோனி வழக்கம் போல் எந்த விமர்சனங்களையும் கண்டுக்கொள்ளாமல் உள்ளார்.

இந்நிலையில், அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் டூர் செல்லும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிகப்பட்டிருந்த நிலையில் தோனி இந்த தொடரில் இருப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால், மேற்கு இந்திய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. நாளை மறுநாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிடும் என தகவல்.

மும்பையில் இன்று நடைபெறவிருந்த நிலையில் இந்திய அணி தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் தோனி குறித்து முடிவெடுக்க அல்ல தோனியின் முடிவுக்காக பிசிசிஐ தேர்வை ஒத்திவைத்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.