உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய முடித்தவுடன் இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்த ஐந்து போட்டிகள் நடக்க இருக்கின்றன.
தற்பொழுது முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மட்டும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் இந்திய அணி நிச்சயமாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று கூறி வரும் நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது தரப்பு வாதத்தை கூறியிருக்கிறார்.
பழி வாங்க நினைத்தாலும் அது இந்தியாவுக்குத்தான் சாதகமாக அமையும்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்து முடிந்தது. அந்த டெஸ்ட் தொடரில் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தில் பிட்ச்சு இந்திய அணிக்கு சாதகமாக இருந்ததாக பல்வேறு வாதங்கள் முன்னெடுத்து வைக்கப்பட்டன.
எனவே நிச்சயமாக இங்கிலாந்து அணி நிர்வாகமும் நடக்க இருக்கின்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மைதானத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானத்தை அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.
ஆனால் அதில் கவலை கொள்ள எதுவும் இல்லை நிச்சயமாக இந்திய அணியில் தற்போது மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே அது இங்கிலாந்து அணிக்கு எதிர்மறையாக நடக்கப் போகிறது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய அணி வெற்றி வாகை சூடும்
நிச்சயமாக சமீப சில வருடங்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்கள் முன்பு விளையாடுவது போல் விளையாடினாலே நிச்சயமாக இங்கிலாந்து அணியை அவர்கள் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்திய அணி எந்த மாதிரியான சூழ்நிலையிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முயற்சிக்கும் என்றும், வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு தான் அதிகமாக உள்ளது என்றும் இறுதியாக கூறி முடித்தார்.