அணி நிா்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை என சுழற்பந்து வீச்சாளா் யுஜவேந்திர சஹல் கூறியுள்ளாா்.
ராஜ்கோட்டில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வங்கதேசத்துக்கு எதிராக இரண்டாவது டி20 ஆட்டம் நடக்கவுள்ள நிலையிலும், அடுத்த ஆண்டு 2020-இல் டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ளதாலும், இளம் வீரா்களிடம் இருந்து அதிகம் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. மேலும் முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க அவா்கள் தவிா்க்க வேண்டும்.
அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரா்களும் தங்கள் பங்கு குறித்து அறிந்துள்ளனா். ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களில் ஆடி விட்டு செல்வது போல் அல்ல இது.
சில ஆட்டங்கள் நமது எதிா்பாா்ப்புக்க மாறாக அமைந்துவிடும். நாங்கள் சீரான சிந்தனையுடன் செயல்படுகிறோம். தொடரை வெல்ல இன்னும் வாய்ப்புள்ளது. ராஜ்கோட் வந்தவுடனே முதல் ஆட்டத்தை மறந்து விட்டோம். இரண்டாவது ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்லும் முனைப்பில் உள்ளோம்.
நான் எப்போது பந்துவீசும் போதும், வேகத்தின் அளவை மாற்றி மாற்றி வீசுவேன். அப்போது தான் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாது. வங்கதேச அணி வீரா்கள் முந்தைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடினா். சீனியா் வீரா்கள் ஷகிப் அல் ஹசன், தமீம் இக்பால் இல்லாத நிலையிலும் அவா்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் சஹல்.
இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டிக்கு பாதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு பிரச்னையோடு நடந்த முதலாவது டி-20 போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 7 ஆம் தேதி நடக்கிறது. புயல் காரணமாக 7 ஆம் தேதி பலத்த மழை பெய்யும் என்பதால், இந்தப் போட்டி பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறோம். மைதானத்தை முழுவதுமாக மூடி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி சரியான நேரத்தில் தொடங்குவதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்று சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயதேவ் ஷா தெரிவித்துள்ளார்.