இந்திய அணிக்கு அடுத்த ஜாஹிர் கான் கிடைத்துவிட்டார்; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !!

பந்துவீச்சில் தொடர்ந்து மிக சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர் அர்ஸ்தீப் சிங்கை முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரன் அக்மல் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

 

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான தென் ஆப்ரிக்கா அணி, இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் மிக மோசமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அர்ஸ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி தென் ஆப்ரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததே தென் ஆப்ரிக்கா அணியின் தோல்விக்கான காரணமாக அமைந்தது.

இந்த போட்டியில் டேவிட் மில்லர் உள்பட தென் ஆப்ரிக்கா அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய அர்ஸ்தீப் சிங்கை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வரும் நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரன் அக்மலும் தன் பங்கிற்கு பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து கம்ரன் அக்மல் பேசுகையில், “அர்ஸ்தீப் சிங் மிக சிறந்த பந்துவீச்சாளர். அர்ஸ்தீப் சிங்கின் மிரட்டல் பந்துவீச்சின் மூலம் இந்திய அணி தனது புதிய ஜாஹிர் கானை கண்டுபிடித்து விட்டது என்றே கருதுகிறேன். அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சில் வேகமும் உள்ளது, ஸ்விங்கும் உள்ளது. வேகத்துடன் மட்டுமல்லாமல் விவேகமாகவும் அர்ஸ்தீப் சிங் பந்துவீசுகிறார். அதே போன் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்ப பந்துவீசுவதே அர்ஸ்தீப் சிங்கின் பெரிய பலமாக கருதுகிறேன். தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் அவர் பந்துவீசிய விதம் ஆச்சரியமளித்தது. இளம் வீரராக இருந்தாலும் அர்ஸ்தீப் சிங் அனுபவமான வீரரை போன்று செயல்படுகிறார்,இவரை போன்ற இடது கை பந்துவீச்சாளரே இந்திய அணிக்கு பல வருட தேவையாக இருந்தது, அர்ஸ்தீப் சிங்கின் மூலம் இந்திய அணியின் இந்த தேவையும் நிறைவடைந்துள்ளது என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை (2-10-22) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.