பேட்டிங் பண்ண ஈஸியா இருந்துச்சு.. ஆனால் இந்திய பவுலர்கள் என்னை மென்டல் அட்டாக் பண்ணாங்க – சதமடித்து அசத்திய கவாஜா பேட்டி!

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒற்றை ஆளாக நாள் முழுவதும் நின்று சதம் அடித்த உஸ்மான் கவாஜா, போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்துள்ளார்.

அகமதாபாத் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் அடித்தது. அதில் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா நாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் அடித்திருந்தார். மறுமுனையில் ஆட்டமிழக்காமல் 49 ரன்களுடன் கேமரூன் கிரீன் இருந்தார்.

கவாஜா, ஆங்காங்கே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். துவக்க வீரர் டிராவில் ஹெட் 32 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்திருந்தனர். இந்திய மண்ணில் முதல் முறையாக கவாஜா சதம் அடித்தார். மேலும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இவர் அடிக்கும் 14வது செஞ்சுரி இதுவாகும்ம்

இந்திய மண்ணில் முதல் முறையாக சதம் அடிப்பது எப்படி இருந்தது? நாள் முழுவதும் பேட்டிங் செய்தது எப்படி இருக்கிறது? என்பது பற்றி பகிர்ந்து கொண்டார் கவாஜா. அவர் பேசியதாவது:

“மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இந்த சதத்தை அடிப்பதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரராக இந்த சதம் எனக்கு மிகவும் அவசியமானதாகவும் இருக்கிறது. துவக்கத்தில் புதிய பந்தை டிராவிஸ் ஹெட் அதிரடியாக அணுகினார். நான் மறுமுனையில் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன்.

நான் பேட்டிங் செய்யும்போது மைதானத்தில் எந்தவித கடினமும் இல்லை. பேட்டிங் செய்வதற்கு ஏதுவாகவே இருந்தது. இந்திய அணியின் பவுலிங்கும் சிக்கலாக இல்லை. எனக்கு இருந்த ஒரே சிக்கல் மனதளவில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான். சில நேரங்களில் அடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக விளையாடுவது தான் மிகப்பெரிய சவால். இந்திய பவுலர்களின் பந்துவீச்சு உணர்ச்சிவசப்படுத்தியது. இது மனதளவில் தாக்குதலை ஏற்படுத்தியது. ஆனால் அவற்றை நிதானமாக எதிர்கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

Mohamed:

This website uses cookies.