பெண்களுக்கான டி20 தொடர், பிசிசிஐக்கு முன்னரே நடத்தி கெத்து காட்டும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்!!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புதிய முயற்சியாக மகளிர் ஒரு நாள் மற்றும் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மகளிருக்கான கிரிக்கெட் தொடருக்கும் வரவேற்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே உள்ளது. அவர்களுக்கான சரியான பிரிவில் அவர்களும் ஆண்கள் கிரிக்கெட்டை போண்று வருமானம் ஈட்டி தருகிண்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது கடந்த இரண்டு வருடங்களாக மகளிருக்கான பிக் பாஷ் டி20 லீக்கை நடத்தி வருகிறது. இந்த போட்டிகளுக்க்கும் அங்கு வரவேற்புகள் இருக்கிறது. இதே போன்று பெண்களுக்கான ஐபிஎல் தொடரும் நடத்தினாள் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஏதுவாக இருக்கும் என பல வருடங்களாக கோரிக்கை இருந்து வருகிறது.

இதனை தற்போது செவி சாய்த்து இந்த வருட ஐபிஎல் தொடரில் சில முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டது. உலகின் முதல் நிலை வீராங்கணைகள் டேனியல்லா, ஹர்மன்ப்ரீத், எல்லீச் பெர்ரி, வேதா கிருஷ்னமூர்த்தி, மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி என பலரை வைத்து இரண்டு அணிகள்கா பிரித்து ஒரு டி20 போட்டி நடத்தப்பட்டது.

நல்ல வரவேற்பு இந்த போட்டிக்கு இருந்தது. இதன் அடுத்த முயற்சியாக அடுத்த வருடம் மளிருக்கான ஐபிஎல் தொடர் நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆனால், எதக்ருமே முன்னோடி மாநிலமாக இருந்து வரும் தமிழகம் பிசிசிஐக்கு முன்னரே மகளிர் டி20 போட்டிகளை நடத்தி அசத்த உள்ளது.

வருடம் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, தமிழக கிரிக்கெட் வீராங்கணைகலுக்கு டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 6 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரை இந்தியன் வங்கி ஸ்பான்சர் செய்கிறது.

இதுதொடர்பாக தியமிழக கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலாளர் ஆர்.ஐ. பழனி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சிறுவர் மற்றும் சிறுமியர் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளை டிஎன்சிஏ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சென்னை நகரம் மற்றும் மாவட்டங்களில் இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்து வருவதால், டிஎன்சிஏவும் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. இளம் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒரு நாள் மற்றும் டி 20 என இரு வகையான போட்டிகளை ஜூன் மாதத்தில் நடத்த உள்ளோம்.

இந்தியன் வங்கி இதற்கான ஸ்பான்சராக உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

கிரிக்கெட் வீராங்கனைகள் எல்லோ சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஓயிட் வாரியர்ஸ், புளு அவெஞ்சர்ஸ், கிரீன் இன்வேடர்ஸ், சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் என 6 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுவர்.
இப்போட்டிகள் 15-ஆம் தேதி முதல் தொடங்கி வரும் 30-ஆம் தேதியோடு நிறைவு பெறும் என்றார் பழனி.

Editor:

This website uses cookies.