இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது. டோனி கேப்டனாக பணியாற்றுகிறார்.
சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டது. ஆனால், ஆப்கன் அணி பாகிஸ்தானிடமும், வங்கதேசத்திடமும் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது. இதனால், அந்த அணிக்கு இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். இருப்பினும், இந்தப் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மிகப்பெரிய ட்விஸ்ட்டாக கேப்டன் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தோனி டாஸ் வீச அழைக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, 696 நாட்கள் கழித்து, சர்வதேச போட்டி ஒன்றில் தோனி டாஸ் வீசிய நிகழ்வு, ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இப்போட்டி கேப்டனாக தோனியின் 200வது போட்டியாக அமைந்தது.
மேலும், இப்போட்டியில் லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அஹ்மத் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அத்துடன் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.
ஆலன் பார்டர் – 178 போட்டிகள்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான இவர் 178 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார் இவற்றில் பெரிதாக ஏதும் அவர் சாதிக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய அணி ஒரு பெரிய அணியாக இருந்த காலகட்டத்தில் இவர் தான் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தார்