தற்போது கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மொஹாலியில் உள்ள மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்த கிங்ஸ் XI பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே அதிரடி வீரர் கோளின் முன்றோவின் விக்கெட்டை எடுத்தது.
அதன் பிறகு ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய கவுதம் கம்பிர் அரைசதம் அடித்து அசத்தினார். 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பிய கம்பிர், அரைசதத்துடன் ஐபில் தொடரை தொடங்கினார்.
ரிஷப் பண்ட் 28 ரன்னும், கிறிஸ் மோரிஸ் 27 ரன்னும் அடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.
பந்துவீச்சு தரப்பில் மோகித் சர்மா மற்றும் முஜீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுக்க, அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் எடுத்தார்கள். கம்பிரின் அரைசதத்தால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 166 ரன் அடித்துள்ளது.
கம்பிரின் சிறப்பான ஆட்டத்தையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் துல்லியமான பந்துவீச்சையும் ட்விட்டரில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இங்கு பாருங்கள்: