‘எங்க தல ரெய்னா வந்துருச்சு’ ட்விட்டரை தெறிக்கவிடும் ரெய்னா ரசிகர்கள்

உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்த அம்பதி ராயுடு, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். அவருக்கு மாற்றுவீரராக சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவுக்குப் பின்னர் டெஸ்ட் தொடர் நடத்தப்படவிருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்கவிருக்கிறது. ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் அம்பதி ராயுடு சேர்க்கப்பட்டிருந்தார். ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடுவுக்கு, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான உடற்தகுதித் தேர்வு பெங்களூரில் நடைபெற்றது. இதில், கேப்டன் விராட் கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்டோர் தகுதி பெற்ற நிலையில், யோ யோ டெஸ்டில் ராயுடு தோல்வியடைந்தார். இதனால், இங்கிலாந்து தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியானது. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடுவுக்கு மாற்றுவீரராக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதையறிந்த ரெய்னா ரசிகர்கள் ர்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

Editor:

This website uses cookies.