உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்த அம்பதி ராயுடு, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். அவருக்கு மாற்றுவீரராக சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவுக்குப் பின்னர் டெஸ்ட் தொடர் நடத்தப்படவிருக்கிறது.
இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான உடற்தகுதித் தேர்வு பெங்களூரில் நடைபெற்றது. இதில், கேப்டன் விராட் கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்டோர் தகுதி பெற்ற நிலையில், யோ யோ டெஸ்டில் ராயுடு தோல்வியடைந்தார். இதனால், இங்கிலாந்து தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியானது. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடுவுக்கு மாற்றுவீரராக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதையறிந்த ரெய்னா ரசிகர்கள் ர்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.