மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா கழட்டிவிடப்பட்டதற்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் பேச்சு !!

மும்பை இந்தியன்ஸ் அணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவை ஏன் தக்கவைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாகிர்கான் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் வெற்றிகர அணியாகத் திகழ்ந்துவரும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை டைட்டில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இருந்தபோதும் கடந்த ஆண்டு நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா(16கோடி), பும்ரா(12கோடி), பொலார்ட்(6கோடி) மற்றும் சூர்யகுமார் யாதவ்(8 கோடி) ஆகிய நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்து விட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அனைவரும் ஹர்திக் பாண்டியா தக்கவைக்க படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கிவிட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பலமாக இருந்த ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு காயம் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை, மேலும் ஒரு அணியில் நான்கு வீரர்கள் மட்டும் தான் தக்கவைக்க முடியும் என்ற விதி இருப்பதால் இவரை 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்க வில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஹார்த்திக் பாண்டியாவை ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்க வைக்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாகீர்கான் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், ஹர்திக் பாண்டியா தற்பொழுது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார், அதற்காக கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் (ரெடென்ஷன்) அணியில் ஒரு வீரரை தக்க வைக்கப்பட வேண்டும் என்றால் அது பல்வேறு விதமான கோணங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையில் மட்டுமே நடக்கும், இதைப் பற்றி பேச வேண்டும் என்றால் பேசிக் கொண்டே போகலாம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்களை (auction) ஏலம் வரும்பொழுது ‘குட்பை'(goodbye) சொல்லி அனுப்ப வேண்டும் என்பது கஷ்டமான ஒன்று தான் ஆனால் விதிமுறை அப்படி தான் உள்ளது என்று ஜாகிர்கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.