யூசுப் பதானை கழட்டிவிட்டது பரோடா கிரிக்கெட் வாரியம்
விஜய் ஹசாரே தொடருக்கான பரோடா அணி, நாக் அவுட் சுற்றில் சீனியர் வீரர் யூசுப் பதானை கழட்டிவிட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்து தரும் இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் லீக் சுற்றுக்கள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் காலிறுதி போட்டிக்கு தயாராகி வருகின்றன.
இதில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பரோடா அணி, லீக் சுற்றுக்களில் சரியாக விளையாடாத சீனியர் வீரர் யூசுப் பதானை அணியில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் பதான், மொத்தம் 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதன் காரணமாகவே யூசுப் பதானை நாக் அவுட் சுற்றுக்கான தனது அணியில் இருந்து பரோடா கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளதாக தெரிகிறது.
பரோடா அணியில் க்ரூணல் பாண்டியா, கேதர் ஜாதவ், தீபக் ஹூடா போன்ற நட்சத்திர வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக பரோடா அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட யூசுப் பதானின் சகோதரர் இர்பான் பதான், பரோடா கிரிக்கெட் அணியில் இருந்தே விலகியது குறிப்பிடத்தக்கது.
பரோடா அணி அடுத்ததாக வரும் 22ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணியை எதிர்கொள்ள உள்ளது.
நாக் அவுட் சுற்றுக்கான பரோடா அணி;
தீபக் ஹூடா, அதிட் செத், க்ரூணல் பாண்டியா, கேதர் ஜாதவ், அதித்யா தேவ்தர், அதித்யா வாக்மோட், யூசுப் பதான், விஷ்னு சொலான்கி, ஸ்வாப்னில் சிங், நினாட் ரித்வா, உர்வில் பட்டேல், ரிஷி அர்தோ, லுக்மான் மெரிக்வாலா, சோயிப் தய், துருவ் பட்டேல், விராஜ் போஸ்லே.