தோனி கிடையாது, விராட் கோலி வந்த பின்புதான் இந்திய அணி முன்னேற்றத்தை கண்டுள்ளது; டூ பிளசிஸ் பாராட்டு !!

விராட் கோலியின் கேப்டன்ஷிப்பால் தான் இந்திய அணி, அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது என்று பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக டூப்லஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்காண பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், பெங்களூரு அணி யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற குழப்பத்தில் தவித்து வந்தது.

பெங்களூர் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெலை நியமிக்கலாமா..? அல்லது தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான செயல்பட்ட டூ பிளசிசை நியமிக்கலாமா..? என்று பெங்களூரு அணி யோசித்து வந்த நிலையில் ஒருவழியாக டூப்லஸ்ஸிஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அணியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த டூப்லஸ்ஸிஸ் 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பெங்களூர் அணி இவரை லாவகமாக தனது அணியில் இணைத்துக் கொண்டது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பின் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனான செயல்பட்ட விராட்கோலி குறித்து டூ பிளசிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், விராட் கோலி ஐபிஎல் தொடரில் மட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். விராட்கோலி ஒரு சிறந்த தலைவர் அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது அவர் தனது பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பால் பல சாதனைகளை படைத்துள்ளார் அதற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும், விராட் கோலி சமகால கிரிக்கெட் தொடரின் ஒரு சிறந்த வீரர் இவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்புதான் இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது என்று கூறலாம் இவரது வருகைக்குப் பின்பு இந்திய அணியின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமாக இருந்தது மேலும் இவருடைய வருகைக்கு பின்பு தான் இந்திய அணி வீரர்களின் உடற்தகுதி மேம்பட்டுள்ளது என்று டூ பிளசிசை விராட் கோலி பாராட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.