கிரிக்கெட்டை ரசித்து ஆடுகிறார் விராட் – புஜரா மெய்சிலிர்ப்பு.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் செத்தேஸ்வர் பூஜா தனது கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து பாராட்டியுள்ளார். அவர் எப்போதும் கிரிக்கெட்டை தனது வாழ்க்கை முறையாகவே பார்க்கிறார் எனவும், இதற்காக ட்ரெசிங் அறையை மிகப்பும் துடிப்புடன் வைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார் புஜரா. மேலும், தோனி மற்றும் கோலியின் தலைமையில் விளையாடியதில் யார் சிறந்தவர் எனவும் கூறியுள்ளார் புஜரா.
தற்போது இங்கிலாந்து கவுண்ட்டி தொடரில் ஆடி ஓய்வில் இருந்து புஜரா, ஆப்கன் அணிகெதிரான டெஸ்ட் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியா அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை மறுநாள் வியாழக்கிழமை துவங்க இல்ல இந்த டெஸ்ட் போட்டி குறித்து பேசிய புஜாரா, தனது டெஸ்ட் கேவ்ப்டன் விராட் கோலியின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பற்றி பேசினார்.
விராட் மிக அதிகமாக பேசுவார். மேலும், கிரிக்கெட்டில் மிக மிக ஆர்வமாக இருப்பார். அதனால் அதிகம் பேசி அனைவருக்கும் அதே சூழலை உருவாக்குவார்.
தற்போது இந்திய அணியின் ட்ரெசிங் அறை ரிலாக்ஸாக உள்ளது. மேலும் , சில இளம் வீரர்கள் அந்த அறையை மிகவும் ஆட்டிவாக பரபரப்பாக வைத்திருப்பர்.
இதில் என்ன அற்புதம் என்றால், இதனால ஒவ்வொரு வீரரும் மைதானத்தில் ஒருவருக்கொருவர் நண்பர்கள் போல் செயல்படுகின்றனர்.
மேலும், தான் தற்போது கோலியின் தலைமையில் செயலப்படுவது பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது வரை கோலியின் கீழ் நன்றாக செல்கிறது. தோனியுடன் இருக்கும் போதும் கூட இதேபோல் தான் இருக்கும். ட்ரெசிங் அறை மிகவும் பரபரப்பாக இருக்கும்.
இருவருக்கும் கீழ் விளையாடியது எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. ஆனால் இருவருமே ஒருவருக்கொருவர் வித்யாசமான குணாதீசியங்களை கொண்டவர்கள். ஆனால் இருவரின் கீழ் விளையாடியதும் எனக்கு மன நிறைவை கொடுத்துள்ளது.
என கூறியள்ளார் புஜரா.