விராட் கோலி, ரவி சாஸ்திரி – பிசிசிஐ மீட்டிங்கில் கேட்கப்படவுள்ள கேள்விகள் இவை தான்!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்தப்படும் என்று பிசிசிஐயின் நிர்வாகக்குழுத்தலைவர் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்துள்ளது ரசிகர்களை பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அரையிறுதி போட்டியில் தோனி களமிறங்கிய வரிசையும் கேள்விக்குள்ளானது.

வழக்கமாக 5-வது அல்லது 6-வது இடத்தில் களமிறங்கும் தோனியை ஏழாவது இறக்கியது ஏன்?, சமீப ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை அளித்த அம்பதி ராயுடு உலகக்கோப்பை தொடரில் ஏன் தேர்வு செய்யப்படவில்லை போன்ற கேள்விகள் எழுந்தது.

குறிப்பாக 4-வது இடத்தில் வீரர்கள் மாற்றி, மாற்றி களமிறக்கப்பட்டனர். ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4-வது இடத்தில் களமிறக்கப்பட்டு பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. ராயுடு 4-வது இடத்துக்கு சரியாக இருப்பார் என்று உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் கூறப்பட்ட நிலையில், அவர் அணிக்கு தேர்வு செய்யப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது. வருங்காலத்தில் சிறந்த அணியை எப்படி கட்டமைப்பது என்பது குறித்து கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் சிஒஏ ஆலோசனை நடத்தும் என அதன் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

‘‘பயிற்சியாளர் மற்றும் கேப்டன் விராட் கோலியுடன் அவர்கள் விடுமுறை முடிந்தவுடன் நாங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவோம். அதேபோல் வருங்காலத்தில் எப்படி செயல்படுவது என்னது குறித்து தேர்வுக்குழு தலைவருடனும் ஆலோசனை நடத்துவோம்’’ என்றும் அவர் கூறினார்.

விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியிடம் அரையிறுதியில் டோனியை 7-வது இடத்தில் களம் இறக்க காரணம் என்ன?, ஒன்றரை ஆண்டுகளாக நான்காவது இடத்திற்கு அம்பதி ராயுடுவை தயார் செய்துவிட்டு, உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்காதது ஏன்? போன்ற கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவில் முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய் (தலைவர்), டயானா எடுல்ஜி, ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் ரவி தோட்ஜே ஆகியோர் உள்ளனர்.

இதில் நிர்வாகிகள் குழு மற்றும் விராட் கோலி தலைமை பயிற்சி ரவி சாஸ்திரி ஆகியவர்களுக்கு இடையே நடைபெறும் விளக்கக் கூட்டத்தில் சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

அவையாவன….

  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
  • நீங்கள் இருவரும் (கோலி, ரவி சாஸ்திரி) யார் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறீர்களா?
  • மிடில் ஆர்டரில் காயமான வீரருக்கு பதிலாக துவக்க வீரரை எடுத்ததன் நோக்கம் என்ன?
  • இறுதிப்போட்டியில் தோனியை முன்னரே இறக்காமல் இறுதியாக களமிறங்கச்  செய்த முயற்சியின் மூலக்காரணம் யார்?
  • நான்காம் நிலையை வீரரை சரியாக தேர்வு செய்யாமல் உலகக்கோப்பை சென்றது எதற்காக?
  • அணியில் சரியாக பயிற்சிகள் நடக்கின்றனவா?
  • உங்களுக்கு (கோலி, ரவி சாஸ்திரி) வேலைப்பளு அதிகமாக உள்ளதா?
  • ஏழாவது இடத்தில் தோனியை இறக்க விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி யாருடன் கலந்து ஆலோசித்தார்கள்?
  • இந்த அணியில் சரியாக செயல்படாத வீரர்கள் யார் யார்?

அடுத்த வருடம் நடக்கும் 2020 டி20 போட்டிக்கான அணியில் உங்களது திட்டம் என்ன?

இது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே கமெண்டில் பதிவுசெய்யவும்

Sathish Kumar:

This website uses cookies.