இனி எப்போதும் விராட் கோலியால் பெங்களூர் அணியின் கேப்டனாக முடியாது; டேனியல் வெட்டோரி உறுதி !!

பெங்களூர் அணியில் மீண்டும் விராட் கோலி கேப்டனாக மாட்டாரா என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ள டேனியல் வெட்டோரி.

பெங்களூரு அணியின் கேப்டனாக 9 வருடங்கள் பயணித்த விராட் கோலி

கடந்த 2021 ஐபிஎல் தொடர் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக ஒன்பது முறை பொறுப்பேற்று வழிநடத்திய பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி,2021 ஐபிஎல் தொடருக்குப் பின் கேப்டனாக இனி தொடரப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

என்னதான் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக பயணித்தாலும் ஒரு கேப்டனாக அவரால் சாதிக்க முடியவில்லை. பெங்களூர் அணியின் கேப்டனாக 9 ஆண்டுகள் இருந்த இவர், பெங்களூர் அணியை ஒருமுறைகூட டைட்டில் பட்டத்தை வெல்ல வைக்க முடியவில்லை. இந்த விரக்தியினால் விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளார்.

பெங்களூர் அணியின் கேப்டன் யார்..?

இருந்தபோதும் விராட் கோலி, தான் விளையாடும் காலம் வரை ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்று தெரிவித்திருப்பதால் பெங்களூர் அணி இவரை ஒரு போதும் கைவிடாது.இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி விராட் கோலியை தக்கவைதுள்ளது.

என்னதான் இருந்தாலும், பெங்களூர் அணிக்கு தற்போதைய மிகப்பெரும் நெருக்கடி பெங்களூர் அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்பதுதான், இதனால் பெங்களூர் அணிக்கு பலரும் யாரை கேப்டனாக ஆக்கினால் சிறப்பாக இருக்கும் என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருசில கிரிக்கெட் வல்லுனர்கள், விராட் கோலியே மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்த சமயத்தில், நியூசிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பெங்களூர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டானியல் விக்டரி, விராட் கோலி ஒருபோதும் பெங்களூர் அணியின் கேப்டனாக பயணிக்க மாட்டார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார்.

இதுகுறித்து டானியல் வெட்டோரி பேசுகையில், “பெங்களூர் அணிக்கு விராட் கோலி கேப்டனாக தொடர மாட்டார் அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், ஒருமுறை அவர் முடிவெடுத்துவிட்டார் அந்த முடிவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும், இனி நான் கேப்டனாக தொடர மாட்டேன் என்று விராட் கோலி கூறிவிட்டார், அதை அப்படியே விட்டு விட வேண்டும்.மேலும் பேசிய அவர், தற்போதைய பெங்களூர் அணியின் கேப்டனாக ஆவதற்கு வாய்ப்புள்ள வீரர்கள் வரிசையில் டுப்லஸ்ஸிஸ், தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் தான் இருக்கின்றனர். மேக்ஸ்வெல் அல்லது டுப்லஸ்ஸிஸ் ஆகிய இருவரில் ஒருவர் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்படுவார். முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த கேப்டனை அப்படியே தொடர் வைப்பார்கள் என்று நினைக்கிறேன்” என டேனியல் வெட்டோரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.