பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான வக்கார் யூனிஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
‘ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள் சீக்கிரமாக தொடங்கப்பட வேண்டும் என்ற யோசனையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில், இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு சரியான தருணம் கிடையாது. ஏதாவது ஒரு கட்டத்தில் இது போன்ற அம்சங்கள் குறித்து நாம் யோசிக்க வேண்டியது அவசியம் தான்.
என்னை பொறுத்தவரை கிரிக்கெட் போட்டிகள் மறுபடியும் நடப்பதற்கு 5-6 மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். உலகம் முழுவதும் தற்போதைய மோசமான நிலைமை கட்டுக்குள் வந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்போது பூட்டப்பட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து சிந்திக்கலாம்.
நான் ஒரு வீரராக அல்லது பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியில் அங்கம் வகிக்கும் போதெல்லாம் ஐ.சி.சி. கோப்பையை வெல்வதை பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆவலுடன் இருப்பேன். அதனால் தான் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி எனக்கும், அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐசிசி புதிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
டெஸட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி கிடையாது. இந்த போட்டி அல்லாத சாம்பியன்ஷிப் எந்தவித அர்த்தத்தையும் ஏற்படுத்தாது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘கிரிக்கெட் To கிரிக்கெட், மத்திய அரசு T20 மத்திய அரசு என்பதில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடினமான சூழ்நிலை உள்ளது என்பது எனக்குத் தெரியும். சாம்பியன்ஷிப்பில் ஐசிசி இன்னும் அதிக அளவில் துடிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த விஷயத்தில் ஐசிசி தலையிட்டு சில விஷயங்களை செய்ய வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான ஆட்டம் இல்லை என்றால் சாம்பியன்ஷிப் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தாது.
இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி எப்போதுமே சிக்கலாகவே உள்ளது. இதனால்தான் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அறிமுகம் மறக்க முடியாததாக உள்ளது. இந்தியா கடந்த சில வருடங்களாக 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி வருகிறது.
கடந்த காலங்களில் இதுபோன்று பார்க்க முடியாது. தற்போது அது மாறியுள்ளது. பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதுதான் இந்தியா டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறது’’ என்றார்.