ஐபிஎல் போட்டியில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் தற்போது “TNCA” போட்டியில் சதம் அடித்து கலக்கியுள்ளார்.
தமிழ் நாட்டை சேர்ந்த இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் வெறும் 17 வயது தான் ஆகியுள்ளது இவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் புனே அணியில் விளையாட இடம் பிடித்தார். இவர் புனே அணியில் சிறப்பாக பந்து வீசி அனைவரிடமும் பாராட்டு பெற்றார்.
சுந்தர் நிச்சயமாக கிடைத்த வாய்ப்புகளை மிக அதிகமாக செய்து, பெரிய மேடைக்கு வந்தார் என்று அறிவித்தார்.இப்போட்டி முடிவடைந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் முதல் பிரிவில் 1 லீக் போட்டியில் பங்கேற்க வந்தார்.
இவர் தற்போது குளோப் ட்ரொட்டர்ஸ் எஸ்.சி அணியில் அபாரமாக விளையாடி 150 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இவர் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி 125 பந்துகளில் 152 ரன்கள் அடித்தார் அதில் 12 பௌண்டரிகளும் 6 சிஸேர்களும் அடங்கும். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்க்கு 341 ரன்கள் எடுத்தது.
அதை அடுத்து களம் இறங்கிய எதிர் அணி 209 ரன்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.