பந்து ரிலீஸ் செய்வதற்கு முன்பு கிரீஸ் கோட்டை விட்டு வெளியே சென்ற தவானை சைலன்ட்டாக எச்சரிக்கை செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் வீடியோவை கீழே பார்ப்போம்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிவரும் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
போட்டியின் ஏழாவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அப்போது பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னரே எல்லைக்கோட்டை விட்டு வெளியே சென்றார் தவான்.
இதை எச்சரிக்கும் விதமாக மேன்கடிங் செய்யாமல் தவானை எச்சரிக்கை செய்யும் விதமாக, அவரை பார்த்தபடி மீண்டும் பந்துவீசுவதற்கு சென்றார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதற்கு அடுத்த பந்தில் இருந்து கடைசிவரை பவுலர் பந்தை ரிலீஸ் செய்யும்வரை உள்ளேயே நின்று கொண்டிருந்தார் தவான். இந்த வீடியோவை கீழே பார்ப்போம்:
போட்டி சுருக்கம்:
இப்போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் மற்றும் கேப்டன் ஷிக்கர் தவான் இருவரும் ஓபனிங் செய்தனர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 9.4 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடி அவுட்டான பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார். முதல் விக்கெட் போனபிறகு, உள்ளே வந்து தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய கீப்பர் ஜித்தேஷ் சர்மா 16 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
இன்னிங்ஸ் கடைசிவரை நின்று ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடிக் கொடுத்த கேப்டன் ஷிக்கர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்தது.
சற்று கடினமான இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்-பிளே ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்திருக்கிறது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி வருகிறார். இவர் தற்போது வரை 15 பந்துகளில் 30 ரன்கள் அடித்திருக்கிறார்.