வீடியோ: இந்த பவுலர பார்த்து தான் பயம் – கவுதம் கம்பிர்

இந்திய அணியின் நட்சத்திர இடது கை தொடக்கவீரர் தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறந்த பந்துவீச்சாளர்களை சந்தித்துள்ளார். கிளென் மெக்ராத், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஷேன் வார்னே என பல சிறந்த பந்துவீச்சாளர்களை சந்தித்துள்ளார், ஆனால் மோர்னே மோர்கெல் காட்டிய பயத்தை போல வேறு யாரும் காட்டியதில்லை என கவுதம் கம்பிர் கூறினார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தன் அணிக்கு வாங்கிய மோர்னே மோர்கெலை வாங்கினார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கவுதம் கம்பிர். ‘பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்னும் எபிசோடில் மோர்னே மோர்கெலை கண்டால் தான் எனக்கு பயம் என கவுதம் கம்பிர் தெரிவித்தார்.

நீங்கள் எதிர்கொண்ட பயங்கரமான பந்துவீச்சாளர் யார்?,” என கவுரவ் கபூர் கேட்டார்.

தென்னாபிரிக்காவின் மோர்னே மோர்கெல் தான். இதனால் தான் அவரை வாங்கினோம். உண்மையை சொல்லினால், இதனால் தான் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாங்கினோம். நான் எதிர்கொண்ட பயங்கரமான பவுலர் மோர்கெல் தான். டெல்லிக்காக விளையாடும் போது அவரை எப்போதும் புகழ்வேன்,” என கம்பிர் கூறினார்.

இப்போதைக்கு மோர்னே மோர்கெலை வெளியே விட்டுவிட்டோம்,” என கம்பிர் மேலும் தெரிவித்தார்.

நாங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிக்கெட் விளையாடுவோம். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அவுட் ஆகாமல் இருந்தால், அடுத்த சனிக்கிழமை அப்படியே விளையாடலாம். அப்படி ஞாயிற்றுக்கிழமை அவுட் ஆகி விட்டால், அத்தோடு அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதிரி இடத்தில் இருந்து தான் நான் வளர்ந்தன,” என கம்பிர் கூறினார்.

அந்த பேட்டியை இங்கு காணுங்கள்:

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.