வீடியோ: ஆண்டவா உன்ன நம்பித்தான் பந்து போடுறேன்…. மந்திரம் போட்டு விக்கெட் எடுத்த ஹர்திக் பாண்டியா!

ஆண்டவனை வேண்டியபடி ஓடிவந்து பந்துவீசி விக்கெட் எடுத்த ஹர்திக் பாண்டியாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு  சஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் ஓபனிங் செய்தனர். முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தபோது, இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைத்து சஃபிக்(20) விக்கெட்டை தூக்கினார் முகமது சிராஜ்.

மறுபக்கம் இன்னொரு துவக்க வீரர் இமாம் உல் ஹக் களத்தில் நிலையாக விளையாட துவங்கினார். பாபர் மற்றும் இமாம் இருவரும் பார்ட்னர்ஷிப்பை வளர்க்க முற்பட்டனர். இரண்டாவது விக்கெட்டிற்கு 32 ரன்கள் சேர்த்திருந்தனர். இமாம் 36 ரன்கள் அடித்து பெரிய ஸ்கொரை அடிக்க பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஹர்திக் பண்டியாவின் முந்தைய பந்தை பவுண்டறியும் அடித்திருந்தார். அடுத்த பந்தை வீசும் முன் ஆண்டவனை வேண்டிக்கொண்டு ஓடிவந்து பந்துவீசினார். அதை அடிக்க முயற்சித்து கீப்பர் வசம் பிடிபட்டு இமாம் உல் ஹக் ஆட்டம் இழந்தார்.

கடவுளை வேண்டிக் கொண்டு ஓடி வந்து விக்கெட்டையும் எடுத்த ஹர்திக் பாண்டியாவின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. வீடியோ இணைப்பை பின்வருமாறு காணலாம்.

அதன்பிறகு கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நல்ல ஸ்கோருக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். பாபர் ஆஸம் 50 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

155 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி, அதன் பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் ஆல் அவுட் ஆகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பாபர் ஆஸம் உடன் பக்கபலமாக நின்று விளையாடி வந்த ரிஸ்வான் துரதிஷ்டவசமாக 49 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி 36 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியுள்ளது.

Mohamed:

This website uses cookies.