இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான மணீஷ் பாண்டே பவுண்டர் லைனில் ஒரு செம்ம கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய் அணி கடந்த பல வருடங்களாகவே ஃபீல்டர்களுக்கு பெயர் போனதாகும்.
முகமது கைஃபில் ஆரம்பித்து தற்போது ஹர்திக் பண்டியா, மணீஷ் பாண்டே வரை நீளுகிறது அந்தப் பட்டியல். தற்போது அந்த தரமான ஃபீல்டிங் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆம், பவுண்டரி கேட்ச்கள் பலவற்றை பல வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் மற்றும் மற்ற சர்வதேச தொடர்களில் பிடித்து பார்த்திருப்போம். தற்போது இந்திய வீரர் ஒருவர் அந்த மரண மாஸ் கேட்ச்சை பிடித்துள்ளார்.
இந்திய வீரர் மணீஷ் பாண்டே தற்போது அந்த கேட்ச்சை பிடித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடயிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடந்து வருகிறது. அந்த போட்டியில் 48ஆவது ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேன்ஸ்கோம்ப் எதிர் கொண்டார்.
அந்த பந்தை தூக்கி சிக்சருக்கு அடித்தார் பீட்டர். அந்த பந்து கிட்டத்தட்ட சிக்சர் பவுண்டரிக்குல் சென்றுவிட்டது, லான்-ஆஃப்பில் ஃபீல்டிங் நின்றிருந்த மணீஷ் பாண்டே பந்தை எல்லையில் நின்று பிடித்து மீண்டும் உள்ளே மைதானத்திற்குள் வீசி பின்னர் அந்த பந்து கீழே விழுவதற்குள் உள்ள வந்து அந்த பந்தையும் பிடித்து அசத்தினார்.
இந்த கேட்ச் பார்ப்பதற்கு எளிதாக தெரிந்தாலும் செய்வதற்க்கு சற்று கடினமானது. சொல்லப் போனால் அது தான் அவர்களது வேளையும் கூட. மேலும், இந்திய அணியின் ஃபீல்டிங் திறனிற்கு காரணம் ஒவ்வொரு வீரர்களின் உடல் தகுதி தான்.
இந்திய அணியில் வைக்கப்படும் ‘யோ-யோ’ உடல் தகுதி தேர்வில் இந்த அற்புதமான கேட்ச் பிடித்த மணீஷ் பாண்டே தான் அதிக மதிப்பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.