ஐபிஎல் சீசன் 11-க்கிற்காக 8 அணிகளும் தயாராகி வருகின்றன. இந்திய அணி வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். சர்வதேச போட்டியில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் அணியில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் மிட்செல் மெக்கிளெனகன். இந்த வருட ஏலத்தில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்கவில்லை. இவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரேன்டர்ஃப்-ஐ எடுத்தது.
ஜேசன் பெரேன்டர்ஃப் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலம் போகாத மெக்கிளெனகனை அவருக்குப் பதிலாக அணியில் சேர்த்துள்ளது.
மெக்கிளெனகன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய சொத்து என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘மெக்கிளெனகன் பெரிய சொத்து. அவர்கள் எங்கள் அணிக்காக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடர் ஏலத்தின்போது சில காரணங்களால் நாங்கள் அவரை எடுக்க முடியாமல் போனது. ஆனால் தற்போது அவரை நாங்கள் பெற்றுள்ளோம். அவர் அணிக்கு திரும்பிய எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. அவர் எங்களுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்’’ என்றார்.