‘இந்தியாவிற்கு வேற பிளான் இருக்கு’ தொடர் தோல்விக்குப்பின்னர் பேகும் பாப் டு ப்லெசி

உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் புதிய திட்டத்துடன் களமிறங்குவோம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் புதிராகத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகின்றன. தென் ஆப்பிரிக்க அணி தான் மோதிய இரு ஆட்டங்களிலும் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹசிம் ஆம்லா காயத்தால் வெளியேற்றியது, நேற்றைய வங்கத்தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் லுங்கி இங்கிடி காயத்தால் வெளியேற்றியது போன்ற நிகழ்வுகள் பெரும் பின்னடைவாக தென் ஆப்பிரிக்காவுக்கு அமைந்தது.

LONDON, ENGLAND – MAY 30: Quinton De Kock (R) and Hashim Amla (R) of South Africa celebrate the wicket of Jonny Bairstow of England off the bowling of Imran Tahir of South Africa during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and South Africa at The Oval on May 30, 2019 in London, England. (Photo by Alex Davidson/Getty Images)

மேலும், அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் தோள்பட்டை காயத்தால் இன்னும் அணிக்கு திரும்பாதது அணியை பலவீனமடையச் செய்துள்ளது. இந்த சூழல் அனைத்தும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 5-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தில்ஹசிம் ஆம்லா, டேல் ஸ்டெயின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 

நாங்கள் கடந்த இரு போட்டிகளாக ஏ பிளான் ஒன்றை வகுத்து செயல்பட்டோம். ஆனால், அது முடிந்துவிட்டது. ஆனால், அடுத்துவரும் ஆட்டங்கள் எங்களுக்கு முக்கியமானவை. இழந்திருக்கும் அணியின் நம்பிக்கையை மீட்டெடுத்து, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். எங்கள் அணி வீரர்களின் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் எவ்வாறு அதிகப்படுத்துவது குறித்து சிறிது பின்னோக்குச் சென்று முயற்சிப்பேன்.

ஏனென்றால், நாங்கள் வலிமையான இந்திய அணியுடன் விளையாடப் போகிறோம். எங்களுக்கு தெரியும், இப்போதுள்ள நிலையில் நாங்கள் போதுமான அளவு ஃபார்மில் இல்லை. ஆதலால், அதற்கு ஏற்றார்போல் மாற வேண்டும். ஆனால், இந்தியாவை வெற்றி கொள்வதற்கு தனியாக பிளான் பி வைத்திருக்கிறோம். அதை களத்தில் தெரிவிப்போம்.

கடந்த இரு போட்டிகளிலும் நாங்கள் போராடாமல் தோல்வி அடையவில்லை, அதேசமயம் துரதிருஷ்டம்தான் தோல்விக்கு காரணம் என்பதிலும் பழிசுமத்தவில்லை. வங்கதேசம், இங்கிலாந்துக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்துவீச வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். அந்த திட்டம் முடிந்துவிட்டது.

பிளான் ஏ படி, முக்கிய பந்துவீச்சாளர்கள் அனைவரையும் அணியில் விளையாடச் செய்து எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பது,. ஆனால், அவர்களால் இணைந்து விளையாட முடியாத அளவுக்கு காயம் தடையாக அமைந்துவிட்டது. அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக பிளான் பி திட்டத்தை செயல்படுத்துவோம்

இவ்வாறு டூப்பிளசிஸ் தெரிவித்தார்.வ்

Sathish Kumar:

This website uses cookies.