வெஸ்ட் இண்டீஸ் தொடரில் யார் யாருக்கு வாய்ப்பு!! தோனி இருப்பாரா? கோலிக்கு ஓய்வா? இளம் வீரர்கள் யார் யார்?

வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19ஆம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்பட இருக்கிறது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு, அணியை தேர்வு செய்கிறது. கேப்டன் விராத் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ஷிகர் தவான் காயத்தில் இருந்து மீண்டுவிட்டாரா என்பதும் இந்தத் தொடரில் தோனிக்கு வாய்ப்பிருக்கிறதா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், இந்த தொடருக்கு இளம் வீரர்கள் சேர்க்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய ஏ அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி.

இந்தியாவுக்கு 2 உலகக் கோப்பையை (2007-20 ஓவர் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி) வென்று பெருமை சேர்த்த அவர் தற்போது ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடி வருகிறார்.

38 வயதான டோனி உலக கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. உலகக் கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட டோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அதாவது ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டால் இந்திய அணியில் இருந்து டோனியை நீக்க முடிவு செய்து இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரை ஓரங்கட்டுவது தான் சரியாக இருக்கும் கருதப்படுகிறது. 6-வது மற்றும் 7-வது வரிசையில் விளையாடும் அவர் பந்துகளை அடிப்பதில் திணறி வருவதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் இது தொடர்பாக டோனியிடம் பேசுவார். அவரிடம் தானாக ஓய்வு பெறுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த நெருக்கடி காரணமாக டோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.