ஐ.பி.எல் 2018ல் டி.ஆர்.எஸ் முறை அறிமுகம்?

ஐ.பி.எல் 2018ல் டி.ஆர்.எஸ் முறை அறிமுகம்?

ஐ.பி.எல் தொடரில் ஆடுபவர்கள் கணிசமாக  மிக இளம் வீரர்களாக உள்ளனர். ஒருசில நொடிகளில் அனுபவம் இல்லாத அம்பையர்கள் கொடுக்கும் ஒரு தவறான முடிவினால் அந்த இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையே கூட பாதிக்கப்படலாம். அதனால் இந்திய கிரிக்கெட்டும் பாதிக்கபடும்.

Basil Thampy of the Gujarat Lions 

தோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த போது டி.ஆர்.எஸ் முறை வேண்டாம், அது அம்பையரை அவமதிக்கும் செயல் போன்றது எனக் கூறி அதனை நிராகரிதார். இதனால், இந்தியாவில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் பல வருடங்களுக்கு டி.ஆர்.எஸ் முறை இல்லாமல் தான் ஆடியது இந்திய மற்றும் பிற அணிகள். ஆனால், இந்திய அணி வெளிநாடுகளில் ஆடும் போட்டிகளில் வைக்கப்படும் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தி கொண்டார் தோனி. 2013ல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபியில், இந்திய அணி கோப்பையை வெல்ல இந்த டி.ஆர்.எஸ் முறையும் கிட்டத்தட்ட பெரும் பங்கு வகித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

Virat Kohli sprays his teammates while MS Dhoni makes a swift exit, England v India, Champions Trophy final, Edgbaston, June 23, 2013

அதன், பின்னர் கோலி கேப்டனாக மாறியவுடன் டி.ஆர்.எஸ் முறையை அப்படியே ஏற்றுக்கொண்டர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிலும் டி.ஆர்.எஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது வரை டி.ஆர்.எஸ் முறையில் எந்த ஒரு பிரச்சனை இல்லாமலும் சென்று கொண்டிருக்கிறது .

தற்போது சர்வதேச டி20 போட்டிகளிலும் டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எந்த ஒரு நாட்டில் நடக்கும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு இடன்ஹா முறை இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை.

தற்போது முதன் முறையாக அடுத்த வருடம் நடக்கும் இந்தியன் பிரிமியர் லீக்கில் நடை முறைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக டி.ஆர்.எஸ் முறைகாக அம்பையர்களுக்கு கோச்சிங் கொடுக்கப்பட்டு வருகிறது. ஐ பி எல் தொடரில் பங்கேற்கும் நடுவர்கள் பெரும்பாலும் ஐ.சி.சி.அனுமதி பெற்ற டி.ஆர்.எஸ் முறையை உயயோகப்படுதாக உள்ளூர் அம்பையர்களாக உள்ளனர்.

இதற்காக ஐ.சி.சியில் உள்ள அம்பையர்களுக்கு கோச்சிங் கொடுக்கும் நடுவர் டென்னிஸ் பர்ன்ஸ் மற்றும் ஐ.சி.சி முதல் தர எலைட் பேனல் நடுவர் பால் ரெய்ப்பில் ஆகியோரது தலைமையில் விசாகப்பட்டினத்தில் டி.ஆர்.எஸ் தொடர்பாக கோச்சிங் கொடுக்கப்பட்டது. இதனால் அடுத்த ஐ.பி.எல் தொடரில் டி ஆர்.எஸ் முறை அறிமுகபடுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ’யின் முன்னணி அதிகாரி ஒருவர் கூறியதாவ்து,

டி.ஆர்.எஸ் முறையை ஐ.பி.எல் தொடரில் அறிமுகம் செய்தது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அதற்காக டி.ஆர்.எஸ் முறையயை ஒத்துக்கியும்விடவில்லை.

எனக் கூறினார்.

ஐ.பி.எல் தொடரில் ஆடுபவர்கள் கணிசமாக  மிக இளம் வீரர்களாக உள்ளனர். ஒருசில நொடிகளில் அனுபவம் இல்லாத அம்பையர்கள் கொடுக்கும் ஒரு தவறான முடிவினால் அந்த இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையே கூட பாதிக்கப்படலாம். அதனால் இந்திய கிரிக்கெட்டும் பாதிக்கபடும்.

இதே ஐ.பி.எல் தொடரின் மூலம் தான். ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர், யுஜவேந்திர சகால், ஜஸ்ப்பிரிட் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீர்ரகள் இந்திய அணிக்கு கிடைத்தனர். இதனை காரணமாக அந்த சிறு பிழை கூட ஏற்பட்டு விடக் கூடாது என டி.ஆர்.எஸ் முறை 2018 ஐ.பி.எல் தொடரில் கொண்டு வர வாய்ப்பிகக் மிக அதிகம்.

Editor:

This website uses cookies.