ஒற்றை ஆளாக எங்களை தோற்கடித்துவிட்டார் கெய்ல் : வில்லியம்சன் புகழாரம்

Chris Gayle - Player of the Match: "I'm always determined. I always give it my all for whatever franchise I represent. I'm a 100 percent. Like I said, it's a new franchise. A lot of people might say that Chris has a lot to prove - he didn't get selected or wasn't picked early in the auction. I think Virender Sehwag has saved IPL by picking me.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பஞ்சாப் கிங்ஸ் லெவன்-ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 16-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு மொஹாலியில் நடைபெற்றது.
முதலில் டாஸ்வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில் 7.5 ஓவரில் ரஷீத் கான் பந்தில் ராகுல் 18 ரன்களுக்கு எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
கிறிஸ் கெயிலுடன்-மயங்க் அகர்வால் இணை சேர்ந்து ஆடினார். மயங்க் அகர்வால் 18 ரன்கள் சேர்த்த நிலையில் கெளல் பந்து வீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கெயில்-கருண் நாயர் இணை சேர்ந்து ஹைதராபாத் பந்துவீச்சை சிதறடித்தனர். கருண் நாயர் 31ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 
கெயில் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு, 11 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 103 ரன்களை குவித்தும், ஆரோன் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 193 ரன்களை எடுத்தது.
ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார், ரஷீத்கான், கெளல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் ஹைதராபாத் அணி தரப்பில் ரித்திமான் சாஹா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் காயமுற்று களத்தை விட்டு வெளியேறினார்.

Preity Zinta(L) co owner of the Kings XI Punjab applauds Chris Gayle of the Kings XI Punjab 50 during match sixteen of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Kings XI Punjab and the Sunrisers Hyderabad held at the Punjab Cricket Association IS Bindra Stadium in Mohali on the 19th April 2018. Photo by: Sandeep Shetty / IPL/ SPORTZPICS

சாஹா 6 ரன், யுசுப் பதான் 19 ரன்களுக்கு மொகித் சர்மா பந்தில் போல்டானார்கள். அதைத் தொடர்ந்து மணிஷ் பாண்டே களமிறங்கினார். 54 ரன்கள் எடுத்த நிலையில் சிறப்பாக ஆடிய கேப்டன் வில்லியம்ஸன் ஆன்ட்ரு டை பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த தீபக் ஹூடா 5 ரன்களில் வீழ்ந்தார்.
மணிஷ் பாண்டே 54 ரன்களுடனும், ஷாகிப் ஹசன் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களையே எடுக்க முடிந்தது. பஞ்சாப் தரப்பில் மொகித் சர்மா, ஆன்ட்ரு டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது.
இதன் மூலம் தொடர் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

Editor:

This website uses cookies.