உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ள ஐந்து அணிகள் குறித்த அலசல் இங்கே
இந்தியா
நிகழ் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்று இந்தியா. மேட்ச் விண்ணர்கள் அதிகம் இருக்கும் அணி இது. மேட்ச் விண்ணர்கள் என்றால், சும்மா சிக்ஸர்களும், பவுண்டரிகளும் மட்டும் அடிப்பவர்கள் அல்ல. சூழ்நிலைக்கு ஏற்றவாறு களத்தில் நின்று, அடித்து ஆடக் கூடியவர்கள். ஆனால், இங்கு பிரச்சனையே இங்கிலாந்து சூழியலை எந்த அளவிற்கு இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதே?.
தற்போது இங்கிலாந்து பிட்சுகள் பெரும்பாலும் ஃபிளாட்டாக இருப்பதால், ரன்கள் சேர்ப்பதில் இங்கு சிக்கல் இல்லை. ஆனால், இங்கிலாந்து கண்டிஷனில் அவ்வப் போது சூழும் மேக மூட்டங்களுக்கும் இடையேயும், வீசும் தென்றலுக்கு இடையேயும் மாறும் விக்கெட்டின் தன்மை, இந்திய பேட்ஸ்மேன்களை சோதித்துவிடுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இப்படிப்பட்ட வானிலையில் இந்தியா சிக்கிக் கொண்டால் அதோ கதி தான்!. மிடில் ஆர்டரில் நாம் தடுமாறுவது அப்போது மேலும் வெட்டவெளிச்சமாகும்.
இந்தியாவின் தடுமாறும் ஓப்பனிங் + இன் கன்சிஸ்டன்ஸி மிடில் ஆர்டர் ஆகியவை இந்தியாவுக்கு 5ம் அணியாகவே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தருகிறது.