2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வைத்து இந்திய வீரர் ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி, இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.
இந்திய அணி கோப்பையை வென்ற ஏறத்தாழ 7 வருடங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இந்த தொடரை மையமாக வைத்து புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
2011ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் இந்திய வீரர் ஒருவர் சூதாட்ட தரகருடன் போனில் பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. த்
சமீபத்தில் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்ட சூதாட்ட தரகர் ஒருவரின் தொலைபேசியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருடன் அவர் போனில் பேசிய ஆடியோ ஒன்று பதிவாகியுள்ளது.
இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இலங்கை
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு டி-20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முன்னதாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 எனக் கைப்பற்றியது.
இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதலில் டாஸ் தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டி காக், அம்லா ஆகியோர் களமிறங்கினார்கள். இலங்கை அணி பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென்ஆப்பிரிக்கா 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 20 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய சண்டகன் 3, சில்வா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 99 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நாங்களும் சலைத்தவர்கள் இல்லை என்று தென்ஆப்பிரிக்கா வேகத்தில் அசத்தியது. இறுதியில் இலங்கை 16.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக சண்டிமல் 36, டி சில்வா 31 ரன்கள் எடுத்தனர்.