எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா திகழ்ந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வருட ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்த ஹர்திக் பாண்டியா, கடந்த வருட ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவால் பழையபடி பந்துவீச முடியாததால் கடந்த வருடம் இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டப்பட்டார்.
இத்துடன் இவருடைய கிரிக்கெட் கரியர் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்த்து நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் ஆல்ரவுண்டராக மீண்டும் வந்தது மட்டுமில்லாமல் குஜராத் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு 2022 ஐபிஎல் தொடரின் டைட்டில் பட்டதை தனது அணிக்கு வெற்றி கொடுத்தார்.
இவருடைய ரீ-என்றி இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகமாக அமைந்தது என்றே கூறலாம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய ஹர்த்திக் பாண்டியா கேப்டன்ஷிப்பிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியதால், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட படையை இந்திய அணி விளையாட வைத்தது.
அதில் தன்னுடைய தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்டியா முழு தொடரையும் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.இதன் மூலம் இவர் இந்திய எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக திகழ்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இப்படி எல்லாம் ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து பேசினாலும், அவரை ஆசிய கோப்பையின் துணை கேப்டனாக நியமிக்காமல் நீண்ட காலம் விளையாடாமல் இருந்த கேஎல் ராகுலை துணை கேப்டனாக இந்திய அணி நியமித்துள்ளது கிரிக்கெட் வட்டத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், ஆசிய கோப்பையில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இல்லாமல் போகலாம்,ஆனால் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக இவர் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்காட் ஸ்டைரிஷ் தெரிவித்ததாவது,“இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் எதிர்கால டி20 தொடருக்கான இந்திய அணி ஹர்டிக் பாண்டியா வழி நடத்துவார், அதில் எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது. ஆறு மாதத்திற்கு முன் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டன் என்று கூறியிருந்தால் அது முரணான வாதமாக பார்க்கப்பட்டிருக்கும், ஆனால் ஹர்திக் பாண்டியா தற்போது மேட்ச் வின்னராக திகழ்ந்துள்ளார். கால்பந்தில் தலைமைத்துவம் உள்ள வீரரிடம் கையில் அணியும் பேண்டை கொடுத்து அவரை பொறுப்பேற்க சொல்வார்கள், இதுபோன்று நாம் நிறைய பார்த்துள்ளோம். இருந்த போதும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகுவதும் எதிர்கால இந்திய அணியின் கேப்டன் ஆவதும் இந்திய அணியின் நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது. ஆனால் ஹர்திக் பாண்டியா தலைமைத்துவம் வகிக்கக்கூடிய ஒரு வீரராக திகழ்கிறார். எந்த ஒரு வீரராக இருந்தாலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தன்னை திறமையானவர் என்பதை நிரூபிக்க பார்ப்பார்கள். ஹர்திக் பாண்டியாவிற்கு தலைமைத்துவம் வகிக்கும் தகுதி உள்ளது, ஒவ்வொரு வீரரும் அவர்களுடைய ஸ்டைலில் விளையாடுகிறார்கள்” என்று ஸ்காட் ஸ்டைரிஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.