ஸ்காட்லாந்து அணியை சேர்ந்த ‘மாட் மாச்சன்’ சில மாதங்களாக தீராத மணிக்கட்டு காயத்தில் அவதி பட்டு வந்தார் இதனால் தற்போது அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
வெறும் 26 வயதே ஆனா இந்த இளம் ஸ்காட்லாந்து வீரரான ‘மாட் மாச்சன்’ தற்போது கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது அனைவருக்கும் மிகவும் வருத்தனமா செய்தி தான். இவர் ஸ்காட்லாந்து அணியின் மிகவும் திறமை வாய்ந்த வீரர் ஆவர்.
உலக கிரிக்கெட் நாடுகளில் தற்போது ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கிரிக்கெட் அணியாகும் ஆனால் இது போன்று அணியின் முக்கிய வீரருக்கு இவ்வாறு நடப்பது மிகவும் சோகமான செய்தி என்று அணியின் கூறிவருகிறார்கள்.
ஸ்காட்லாந்து அணியில் இருந்து தற்போது ஓய்வு பெற்ற மாட் மாச்சன் பேசியது :
” இந்த நேரத்தில் நான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது எனக்கு மிகவும் வேதநாயக உள்ளது, நான் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக சாதிக்க வேண்டும் என்று மிகவும் ஆசை பட்டேன் ஆனால் இந்த இளம் வயதிலேயே இது போன்று எனக்கு நடந்தது மிகவும் மோசமான ஒன்று”
” நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தான் ஆசை படுகிறேன் ஆனால் மருத்துவர்கள் என்னை கிரிக்கெட் போட்டிக்கு செல்ல கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார்கள், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு என் உடல் தகுதி மிகவும் முக்கியமான ஒன்று ஆனால் தற்போது அதை நான் இழந்து விட்டேன் ”
“நான் ஸ்காட்லாந்து அணியில் விளையாடியதை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன் ஆனால் தற்போது ஓய்வு பெறுவது மிகவும் வருத்தமாக உள்ளது ” என மாட் மாச்சன் கூறியுள்ளார்.
மாட் மாச்சன் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்காட்லாந்து அணியில் முதல் முதலாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 2013இல் அணியில் இடம் பிடித்தார். இவர் அதிக பட்ச ரன்களாக கென்யா அணிக்கு எதிராக 114 ரன்கள் அடித்தார். இவர் பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்து வீசவும் செய்வார், மேலும் இவர் 2015இல் நடந்த உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் 2016இல் நடந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் விளையாடி உள்ளார்.