பொழுதுபோக்கு முறை குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த விளையட்டின் சூப்பர் ஸ்டார் ஜான் சீனா. அந்த விளையாட்டின் பல பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
90களில் பிறந்து இது போன்ற விளையாட்டுக்களை ரசித்த ரசிகர்கள் பலருக்கு ஜான் சீன ஒரு பேவரட் வீரராக இருந்திருப்பார். அவர் சில படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ஜான் சீனா கடந்த மாதம் WEE சர்விவர் சீரியசில் ஆடினார். அதன் பின்னர் 5 போட்டிகளில் எலிமினெட்டார் தொடரிலும் ஆடினார்.
தற்போது அவரது இஸ்டஸ்கிராம் பக்கத்தில் இந்திய அணியின் முன்னாக ஜாம்பவான் வீரர் ராகுல் ட்ராவிட்டின் கருத்துருக்களை ஷேர் செய்துள்ளார். அதே போல 90களில் பிறந்து கிரிக்கேரட் விளையாட்டை ரசித்த பலருக்கு ஜாம்பவான் ராகுல் டிராவிட் என்றால் அலாதி பிரியம் தான்.
உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருந்துள்ளனர். தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் ஜான் சீனா அவரது கருத்துருக்களை ஷேர் செய்துள்ளார். அவருடைய காலத்தில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று போற்றப்பட்டவர்.


மைதானத்தில் யாருடனும் சண்டை வைத்துக்கொள்ளமாட்டார். எப்போதும் அமைதியாக ஆடுகளத்தில் தனது ஜாம்பவான் ஆட்டத்தை காட்டுவார். அதனை வைத்து தான் ஜான் சீனா அவரது போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
அதில் டிராவிட் கூறியது,
‘நீங்கள் அவ்வளவு ஆக்ரோஷமாக யாரையும் பலி வாங்க ஆடவில்லை எனில், உங்களது மரியாதைக்காகவும் உங்களுடைய மாண்பின் பெருமைக்காகவும் ஆடுங்கள்’
என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செத்துள்ளார்.
ராகுல் டிராவிட் அவரது காலத்தில் ஒரு ஜாம்பவான் வீரர்காக திகழ்ந்தவர். தற்போது ஓய்வு பெற்ற பின் தான் உண்டு தன் வேலை உண்டு என இராமல் இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறார். தற்போது, இந்தியா ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்தியாவிற்காக 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள டிராவிட் 52.31 சராசரியில் மொத்தம் 13,288 ரன்கள் குவித்துள்ளார்.அதே போல் ஒருநாள் போட்டிகளிலும்10,000 ரன்களுக்கு மெல் குவித்துள்ளார். 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்கள் குவித்துள்ளார்.