246 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணியை தங்களது அபார பந்துவீச்சால் 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த நெதர்லாந்து அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய லீக் போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் இறங்கியது. சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் சரிய 112 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறி வந்தது நெதர்லாந்து அணி.
அந்த சமயத்தில் உள்ளே வந்து சிறப்பாக விளையாடிக்கொடுத்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் அடித்தார். வாண்டர் மர் வே 19 பந்துகளுக்கு 29 ரன்கள், ஆரியன் டெத் 9 பந்துகளுக்கு 23 ரன்கள் என கடைசியில் அசத்தலான பங்களிப்பை கொடுக்க, 43 ஓவர்களில் ஏற்றிகள் இழப்பதற்கு 245 ரன்கள் அடித்தது நெதர்லாந்து அணி.
முதல் இரண்டு போட்டிகளில் அபாரமான வெற்றியை பெற்று இந்த போட்டியில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு விக்கெட்டுகள் தெரிந்து கொண்டே இருந்தன. பந்துவீச்சில் நெதர்லாந்து பவுலர்கள் அசத்தினர்.
44 ரன்களுக்கு 4 விக்கெடுகளை இழந்து மிகவும் தடுமாறி வந்தபோது கிளாசன் மற்றும் மில்லர் இருவரும் ஜோடி சேர்ந்து மெல்ல மெல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சரியான நேரத்தில் கிளாஸன்(28) விக்கெட் எடுத்தார் வேன் பீக். இங்கிருந்து ஆட்டம் சூடு பிடிக்க துவங்கியது.
89 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது தென்னாப்பிரிக்கா அணி. அதன் பின்னர் 109 ரன்களுக்கு 6ஆவது விக்கெட்டையும் இழந்தது.
களத்தில் நிலைத்து நின்று விளையாடி வந்த டேவிட் மில்லர் 43 ரண்களில் இருந்த போது கிளீன் போல்ட் ஆனார். இந்த சமயத்தில் நெதர்லாந்து அணிக்கு முழு நம்பிக்கை பிறந்தது. பின்னர் கோட்ஸே 22 ரன்கள், மகாராஜ் 40 ரன்கள் அடித்து கடைசி வரை போராடி பார்த்தனர். ஆனால் பலனளிக்கவில்லை.
42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன தென்னாப்பிரிக்கா அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக வரலாறு காணாத வெற்றியே பதிவு செய்துள்ள நெதர்லாந்து அணி, ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையில் முதல் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.