நான் 1999ல் முதல் போட்டியில் இப்படித்தான் அறிமுகம் ஆனேன்: புகைப்படத்தை வெளியிட்ட யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது முதல் போட்டி நினைவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இவர் தனது அதிரடி ஆட்டத்தால் பிரபலமானவர். குறிப்பாக இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் சில கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் போட்டி குறித்த நினைவை பதிவிட்டுள்ளார். அதில்,“முதல் முறையாக நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு ஆன போது எடுக்கப்பட்ட புகைப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ராகுல் திராவிட், விஜய் தஹியா ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படத்தையும் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

யுவராஜ் சிங் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் கோப்பை தொடரில் கென்யாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இவர் இந்தியா சார்பில் 304 ஒருநாள் போட்டியில் களமிறங்கி 8701 ரன்களை குவித்துள்ளார். இதில் 14 சதங்களும் 42 அரைசதங்களுக்கும் யுவராஜ் சிங் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

இதற்கு முன்னதாக,

மூன்று விதமான போட்டிகளில் தனித்தனி கேப்டனை நியமிப்பது குறித்து யுவராஜ் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதனிடையே கேப்டன் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியானது. எங்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை என கூறி விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

விராட் கோலி ஒரு நாள், டெஸ்ட், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதால் அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனை குறைக்க கேப்டன் பொறுப்பை பிரித்து தர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண் யுவராஜ் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “முன்பெல்லாம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றது. தற்போது டி20 உட்பட மூன்று விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருப்பது சிரமமான ஒன்று தான். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்வு கிடைக்கும். எனவே விராட் கோலியின் சிரமத்தை எப்படி குறைக்க வேண்டுமென அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்“ என்று யுவராஜ் கூறினார்.

Sathish Kumar:

This website uses cookies.