இந்திய கிரிக்கெட் அணி கடந்த 6 மாத சம்பளத்தை பிசிசிஐ-யிடம் இருந்து பெறவில்லை. தன் பங்கை கொடுக்கும்படி ஐசிசி-யிடம் பிசிசிஐ பேசிக்கொண்டிருப்பது நமக்கு நன்றாகவே தெரியும்.
“ஒரு டெஸ்ட் போட்டி முடிந்து 15 நாள் அல்லது ஒரு மாதத்தில் எங்களது சம்பளத்தை பெற்றுவிடுவோம். ஆனால் இந்த முறை பல நாட்களாக காத்திருக்கிறோம். இதற்கு முன்பு இது போன்று நடந்தது இல்லை” என ஒரு இந்திய வீரர் தெரிவித்துள்ளார்.
ஒரு டெஸ்டுக்கு சீனியர் வீரர்களுக்கு 15 லட்சமும், அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு 7 லட்சமும் ஊதியமாக கொடுக்கிறார்கள். இந்திய அணி தன்னுடைய சொந்த மண்ணில் பட்டய கிளப்பி வந்தார்கள். நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை புரட்டிப்போட்டது இந்தியா.
பெண்கள் கிரிக்கெட் அணிக்கு அனைத்து சீனியர் வீராங்கனைக்கும் ரூபாய் 1 லட்சம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க தாமதிக்கிறது. இதனால்,விரைவில் அவர்களுக்கு ஊதியம் வழங்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.