இந்த ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி சென்ற 43-வது லீக் போட்டியில், பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.
இந்த சுலபமான இலக்கை மிக முக்கிய வீரரான கெயில், கோஹ்லி, டிவிலியர்ஸ் அணியில் இருந்தும் மிகவும் மோசமாக விளையாடி பஞ்சாப் அணியுடன் மிகவும் மோசமாக பெங்களூரு அணி தோற்று போனது.
இதில் கோஹ்லி மிகவும் மோசமாக விளையாடி வந்தார் அவரின் மோசமான ஆட்டத்தை கண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ‘இது போன்ற தோல்விகளில் இருந்து விராட் கோஹ்லி, பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கோஹ்லி முதலில் சென்று தனது முகத்தை தானே கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் தான் இது போன்ற கேவலமான ஷாட்களை விளையாடுகிறாரா என எனக்கு சந்தேகமாக உள்ளது.
முதலில் அவர் தலைவர் என்பதை உணர வேண்டும். தவிர, பார்ம் இல்லாத போது களத்தில் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடி, இழந்த பார்மை மீட்க முதலில் முயற்சிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.