டூ பிளசிஸ் அசத்தல் சதம்… இந்திய அணிக்கு 270 ரன்கள் டார்கெட்
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் இன்று நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு, குவிண்டன் டி காக் 34 ரன்களும், ஹசீம் ஆம்லா 16 ரன்களும் எடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தனர்.
அடுத்தடுத்து வந்த வீரர்களில் கிறிஸ் மோரிஸை(37) தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கும் அளவிற்கு ரன் குவிக்காமல் விகெட்டை இழந்தாலும், மறுமுனையில் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கி இறுதி ஓவரை தாக்குபிடித்த அந்த அணியின் கேப்டன் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்து, ஒருநாள் அரங்கில் தனது 9வது சதத்தை பதிவு செய்து 120 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி 269 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
டு பிளசிஸ் சதம், மீண்டு வந்த தென்னாப்பிரிக்க அணியை பாராட்டி தள்ளும் ட்விட்டர் உலகம்: