5.மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காற்று மாசுபாடு என போட்டியை நிறுத்திய இலங்கை வீரர்கள்
நேற்று முதல் (டிசம்பர் 2) இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் தங்களது திறமையான பேட்டிங்கால் இலங்கை அணியின் பந்து வீச்சை நாளா புறமும் சிதறடித்தனர். துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 155 ரன்னுக்கு கேப்டன் விராட் கோலி 243 ரன்னுக்கு குவித்தனர். இரண்டாவது நாளான இன்று (டிச.03) 500 ரன்னை தாண்டி சென்று கொண்டிருந்த இந்திய அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஏதாவது செய்து ஆட்டத்தை நிறுத்த நினைத்த இலங்கை வீரர்கள் காற்று மிகவம் மாசுபட்டுள்ளதாக கூறி அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டனர்.
Smog? Pollution? What's happening? https://t.co/OltVNKU99h
— Sri Mahat (@amswat) December 3, 2017
இதில் வேடிக்கை என்னவென்றால், இரண்டு நாளாக மைதானத்திலேயே பத்துக்கு பந்து ஓடிக்கொண்டிருக்கும் விராட் கோலிக்கு அந்த மாசுபாடு தெரியவில்லை, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருந்து வந்த நாள் முழுவதும் மைதானத்தில் நின்றுகொண்டிருக்கும் அம்பையர்களுக்கு அந்த பிரச்சனை வரவில்லையாம்,
இலங்கை வீரர்களுக்கு மற்றும் ஒன்று சேர்ந்தார் போல காற்று மாசு வந்துவிட்டதாம், இதனால் அனைவரும் மாஸ்க் ஒன்றை மாட்டிக்கொண்டு ஆட்டத்தை நிறுத்தும் படி அம்பையரிடம் போய் நின்று முறையிட்டார்கள். ஆனால், அது முடியாது என்று சொல்ல மீண்டும் மீண்டும் அம்பையரிடம் கேட்டு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டனர் இலங்கை வீரர்கள்.
இப்படி ஆட்டம் நிற்க, ஒரு வேகத்தில் சென்று கொண்டிருந்த இந்திய அணியின் ஆட்டம் தடைபட்டது. இதனால் இலங்கை வீரர்கள் நினைத்த விக்கெட்டுகளும் விழுந்தது. அடுத்தடுத்து அஸ்வின் மற்றும் விராட் கோலி விக்கெட் விழுந்தது. மீண்டும் நேரத்தை கடத்தி ஏமாற்ற நினைத்த இலங்கை வீரர்கள் இரண்டு பேர் காயம் எனக் கூறி வெளியேற 9 பேர் மற்றும் களத்தில் இருந்தார்கள். சுதாரித்துக் கொண்ட அம்பையர் மீண்டும் வீரர்களின் விடுப்பை கேட்டார். இந்த நிலையிக் விராட் கோலி, விட்டால் இது போலவே செய்து நேரத்தை கடத்தி இன்றைய நாளை வீனடித்துவிடுவார்கள் என ஆட்டத்தை டிக்லேர் செய்துவிட்டார்.
நினைத்தது நிறைவேறியது போல, சிரித்துக்கொண்டே மைத்தனத்தை விட்டு வெளியேறினார்கள் இலங்கை வீரர்கள்.