இஏஎஸ் பிரசன்னா:
1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் பிஎஸ்.சந்திரசேகர், எஸ்.வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி மற்றும் பிரசன்னா ஆகிய நான்கு பேர் ஆகும். இவர் நெஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் மைசூருவில் பொறியியல் படித்து முடித்துள்ளார். இதுகுறித்து பிரசன்னா, “நான் பொறியியல் படித்ததால் எனக்கு பகுப்பாய்வு திறன் அதிகமாக இருந்தது. இதனால் என்னுடைய விளையாட்டிற்கு அது உதவியது” என ஒருமுறை தெரிவித்துள்ளார்.