South Africa's AB de Villiers reacts as he leaves the ground after losing his wicket during the first day of their second cricket test match in Bangalore, India, Saturday, Nov. 14, 2015. (AP Photo/Aijaz Rahi)
தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பகல்-இரவாக நடக்கிறது. இது 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியாகும். இதற்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வு எடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
during the 2015 ICC Cricket World Cup match between South Africa and the West Indies at Sydney Cricket Ground on February 27, 2015 in Sydney, Australia.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடிய டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசியாக 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடி இருந்தார். 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஸ்டெயின் தற்போது தான் அணிக்கு திரும்பி உள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் தசைப்பிடிப்பால் விலகிய மோர்னே மோர்கலும், கடந்த ஜூலை மாதத்தில் முதுகுவலி காரணமாக அணியில் இருந்து வெளியேறிய பிலாண்டரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்த கேப்டன் டுபிளிஸ்சிஸ் உடல்தகுதி பெற்று அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த போட்டிக்கு முன்னதாக, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நடக்கவுள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இருந்து காதம் காரணமாக விளக்கியுள்ளார் ஏ.பி.டி வில்லியர்ஸ்.
இது குறித்து, ஜிம்பாப்வே அணியின் மேலாளர் முகமது மொசாஜி கூறியதாவது,
டி வில்லியர்ஸ் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து கடினமான தொடர்கள் வரவுள்ள நிலையில் , முன்னெச்சரிக்கையாக ஜிம்பாப்வே அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இருந்து விளக்கியுள்ளார்.
தென்ஆப்பிரிக்க அணி வருமாறு:-
டுபிளிஸ்சிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, பவுமா, குயின்டான் டி காக், டி புருன், டீன் எல்கர், கேசவ் மகராஜ், மார்க்ராம், மோர்னே மோர்கல், பெலக்வாயோ, பிலாண்டர், ரபடா, ஸ்டெயின்.